பொள்ளாச்சியில் யானைகள் முகாமில், வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே கோழிகமுத்தி யானைகள் முகாமில், வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அரசு உரிய நிவாரணம் வழங்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கோழிகமுத்தி யானைகள் முகாமில், வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அரசு உரிய நிவாரணம் வழங்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான வளர்ப்புயானைகள்முகாம் உள்ளது. இங்கு 27 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதில் வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட அசோக் என்ற 12 வயது யானையின் (பாகன்) காவடியாக, கோழிகமுத்தி மலை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(45) மற்றும் முருகன் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல அசோக் என்ற யானைக்கு ஆறுமுகம் உணவு அளித்து விட்டு மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்கு அழைத்துச் சென்றபோதுதிடீரென அந்த யானை முருகனைத் தாக்கியது. அதைப் பார்த்த ஆறுமுகம் அவரை காப்பாற்றச் சென்றபோது அவரையும் தாக்கியது.

இதில் கீழே விழுந்த ஆறுமுகத்தின், மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் தகவல் கொடுத்ததின் பேரில், வனத்துறையினர் காயமடைந்த ஆறுமுகத்தை ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.



ஆனால் மருத்துவமனையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை போலீசார், உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சவக்கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று டாப்ஸ்லிப் கோழிகமுத்தி முகாமில் யானை பொங்கல் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டதால், மகிழ்ச்சியிலிருந்த மலைக்கிராம மக்கள், இந்த சம்பவம் காரணமாகச் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

மேலும், உயிரிழந்த ஆறுமுகத்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரண தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...