இந்த ஆண்டு பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மாட்டு பொங்கல் கொண்டாடுவோர் அவரவர் வீடுகளிலேயே பட்டி வைத்து, பூஜை செய்து எளிமையாக கொண்டாடினர்.
கோவை: தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு பொங்கல் விழா கொண்டாட பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், நேற்றைய தினம் பொங்கல் விழா மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இன்றைய தினம் மாட்டு பொங்கல் விழாவும் மிக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டத்தில் வழக்கமாக மாட்டு பொங்கல் தினத்தன்று மாடுகளுக்கு அலங்காரம் செய்து, படையல் படைத்து சாலைகளில் வளம் வர வைப்பது வழக்கமான ஒன்று. குறிப்பாக, கோவையில் கிராம பகுதிகளில் மாட்டுப்பொங்கல் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மாட்டு பொங்கல் கொண்டாடுவோர் அவரவர் வீடுகளிலேயே பட்டி வைத்து, பூஜை செய்து எளிமையாக கொண்டாடினர். தங்கள் வீடுகளில் உள்ள மாடுகளைக் குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளை சீவி பெயிண்ட் அடித்து, அலங்கார கயிறு உள்ளிட்ட பொருட்களை கட்டி பூஜை செய்துவழிபட்டனர்.
இது குறித்துமாட்டு உரிமையாளர்கள் கூறுகையில், "உழவனின் உயிர்த் தோழானாக இருந்து உழைக்கும் கால்நடைகளை போற்றி நன்றி கூறும் நோக்கோடு இந்த பண்டிகை கொண்டாப்பட்டு வருகிறது.
இந்த நாளில் இளநீர், தயிர், பால், நவதானியங்கள் நிரம்பிய பட்டி குளத்தில், பசு மாடு கால் வைத்து பட்டி மிதித்தல் நிகழ்வு என்பது முக்கிய நிகழ்வாகும்.
மாடுகளின் வாயினை நன்கு கழுவி, முன்று முறை வலம் வர வைத்து பட்டி மிதிக்க வைப்போம். முன்னதாகச் சூரியனுக்கு படையல் வைத்துப் பொங்கலை மாடுகளுக்கும் உண்ண கொடுப்போம். பின்னர்,கால்நடைகள் நன்கு ஒய்வு கொடுத்து விடுவோம், என்றார்.
கொரோனா என்பதால் நாளை மாடுகளை கோவிலுக்கு அழைத்து செல்ல முடியாத சூழல் உள்ளதால்,இன்றே தோட்டங்களில் மாடுகளுக்கு சிறப்புபூஜை செய்து விட்டோம்", என்றார்.

கோவை மாவட்டத்தில் வழக்கமாக மாட்டு பொங்கல் தினத்தன்று மாடுகளுக்கு அலங்காரம் செய்து, படையல் படைத்து சாலைகளில் வளம் வர வைப்பது வழக்கமான ஒன்று. குறிப்பாக, கோவையில் கிராம பகுதிகளில் மாட்டுப்பொங்கல் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மாட்டு பொங்கல் கொண்டாடுவோர் அவரவர் வீடுகளிலேயே பட்டி வைத்து, பூஜை செய்து எளிமையாக கொண்டாடினர். தங்கள் வீடுகளில் உள்ள மாடுகளைக் குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளை சீவி பெயிண்ட் அடித்து, அலங்கார கயிறு உள்ளிட்ட பொருட்களை கட்டி பூஜை செய்துவழிபட்டனர்.
இது குறித்துமாட்டு உரிமையாளர்கள் கூறுகையில், "உழவனின் உயிர்த் தோழானாக இருந்து உழைக்கும் கால்நடைகளை போற்றி நன்றி கூறும் நோக்கோடு இந்த பண்டிகை கொண்டாப்பட்டு வருகிறது.
இந்த நாளில் இளநீர், தயிர், பால், நவதானியங்கள் நிரம்பிய பட்டி குளத்தில், பசு மாடு கால் வைத்து பட்டி மிதித்தல் நிகழ்வு என்பது முக்கிய நிகழ்வாகும்.
மாடுகளின் வாயினை நன்கு கழுவி, முன்று முறை வலம் வர வைத்து பட்டி மிதிக்க வைப்போம். முன்னதாகச் சூரியனுக்கு படையல் வைத்துப் பொங்கலை மாடுகளுக்கும் உண்ண கொடுப்போம். பின்னர்,கால்நடைகள் நன்கு ஒய்வு கொடுத்து விடுவோம், என்றார்.
கொரோனா என்பதால் நாளை மாடுகளை கோவிலுக்கு அழைத்து செல்ல முடியாத சூழல் உள்ளதால்,இன்றே தோட்டங்களில் மாடுகளுக்கு சிறப்புபூஜை செய்து விட்டோம்", என்றார்.