பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் கொண்டாடப்பட்ட யானை பொங்கலை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். வளர்ப்பு யானைகளுக்கு அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பழம், கரும்பு, சத்து மாவு என உணவாக அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் கொண்டாடப்பட்ட யானை பொங்கலை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழி கமுத்தியில் கும்கி கலீம், சின்னதம்பி, அரிசி ராஜா உட்பட இருபத்தி ஏழு காட்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு உத்தரவின் பேரில் இங்குஆண்டு தோறும் யானை பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானோ வைரஸ் தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்து வந்தது.
தற்பொழுது தமிழக அரசு கூடுதல் தளர்வுகள் அறிவித்த நிலையில் சமூக இடைவெளி மற்றும் முக்கவசம் அணிந்து டாப்ஸ்லிப் பகுதிக்கு முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வனத்துறை வாகனத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்று யானை வளர்ப்பு முகாமுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இன்று யானை பொங்கல் நிகழ்ச்சிக்கு வளர்ப்பு யானைகளுக்கு அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்புப் பூஜைகள் செய்து பழம், கரும்பு, சத்து மாவு என உணவாக அளிக்கப்பட்டது. இதில் ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராம சுப்பிரமணியம், துணை கள இயக்குநர் கணேசன், வனச்சரகர்கள் மணிகண்டன், காசிலிங்கம், வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் மாற்றம் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் யானை பொங்கல்நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.