கோவையில் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

போதை மாத்திரைகளை சட்ட விரோதமாக ஒரு கும்பல் வாங்கி இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்த நிலையில், ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: போதை மாத்திரைகளை சட்ட விரோதமாக ஒரு கும்பல் வாங்கி இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

கோவை மாநகர பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே வலி நிவாரணி மாத்திரைகளைப் போதை மாத்திரைகளாக பயன்படுத்தும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை ஊசி மூலமாக உடலில் செலுத்தும்போது போதையின் உச்சத்திற்குச் செல்வார்கள்.

மேலும், இதிலிருந்து வாசனை வராது என்பதால் பெற்றோர்கள் மற்றும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாது என்பதால் இதனை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

மாத்திரைகளைச் சட்டவிரோதமாக ஒரு கும்பல் வாங்கி இளைஞர்களைக் குறி வைத்து விற்பனை செய்து வருகின்றன. போதை மாத்திரையை விற்பனை செய்யும் கும்பலைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தனிப் படைகள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு மாநகரில் போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 14 பேரைக் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், ரேஸ்கோர்ஸ் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையில், வாலாங்குளம் வழியாக ரோந்து சென்றனர். அப்போது அங்கு இரண்டு வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தன அதில் ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து, போலீஸார் அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு வாலிபரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். சோதனைகளை ஒரு போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. அவ்விடம் இருந்து 50 போதை மாத்திரைகள் ஊசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் ரத்தினபுரி அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்த சதாம் உசேன் வயது 29 என்பது தெரியவந்தது.

பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தப்பியோடிய மாசிலாமணி என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...