விஷம் வைத்து 9-மயில்களை கொன்ற விவசாயி தப்பியோடிய நிலையில், வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கால்நடை மருத்துவர்கள் இறந்த மயில்களின் உடல்களைக் கைப்பற்றி சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்து வருகின்றனர்.
கோவை: 9-மயில்கள் பலியான சம்பவத்தில், விவசாயி தப்பியோடிய நிலையில், வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கோவை கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி. இவருக்குச் சொந்தமான விளை நிலத்தில் மயில்கள் அடிக்கடி உணவு தேடி வந்ததால் இன்று காலை உணவில் விஷம் கலந்து வைத்துள்ளார்.

இதை உண்ட சுமார் 9-மயில்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதைச் சுதாரித்துக்கொண்ட குப்புசாமி அவசர அவசரமாக மயில்களைப் புதைத்துவிட்டுத் தப்பியோடி விட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இறந்த மயில்களின் உடல்களைக் கைப்பற்றி சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்து வருகின்றனர்.
கோவை கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி. இவருக்குச் சொந்தமான விளை நிலத்தில் மயில்கள் அடிக்கடி உணவு தேடி வந்ததால் இன்று காலை உணவில் விஷம் கலந்து வைத்துள்ளார்.
இதை உண்ட சுமார் 9-மயில்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதைச் சுதாரித்துக்கொண்ட குப்புசாமி அவசர அவசரமாக மயில்களைப் புதைத்துவிட்டுத் தப்பியோடி விட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இறந்த மயில்களின் உடல்களைக் கைப்பற்றி சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்து வருகின்றனர்.