11.48-ஏக்கர் பரப்பளவில் 337-கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியைப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.
திருப்பூர்: 11.48-ஏக்கர் பரப்பளவில் 337-கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியைப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.
தரை மற்றும் 5-தளங்களுடன் 600-படுக்கை வசதி, 12-அறுவை சிகிச்சை அரங்குகள், நவீன ஆய்வகங்களுடன் மருத்துவமனை கட்டிடம், தரை மற்றும் 6 தளங்களுடன் கல்லூரி கட்டிடம், 8 துறைகளுக்கான வகுப்பறை, ஆய்வகம் மற்றும் நூலக வசதி, 1000-ம் பேர் அமரும் கலை அரங்க கட்டிடம்.
மாணவ, மாணவியர் தங்கும் விடுதி, ஆசிரியர், பணியாளர் குடியிருப்பு, மருத்துவ அலுவலர்கள் குடியிருப்பு மற்றும் விளையாட்டு மைதான வசதிகளுடன் 11.48-ஏக்கர் நிலத்தில் 337-கோடி மதிப்பீட்டில் மூன்று தொகுதிகளாகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில், கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள காணொளி காட்சி அரங்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித், அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் உள்ளிட்டோர் விழா மேடைக்கு வந்தனர்.