திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழா: காணொலியில் பிரதமர் மோடி திறந்து வைப்பு

11.48-ஏக்கர் பரப்பளவில் 337-கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியைப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.



திருப்பூர்: 11.48-ஏக்கர் பரப்பளவில் 337-கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியைப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.



தரை மற்றும் 5-தளங்களுடன் 600-படுக்கை வசதி, 12-அறுவை சிகிச்சை அரங்குகள், நவீன ஆய்வகங்களுடன் மருத்துவமனை கட்டிடம், தரை மற்றும் 6 தளங்களுடன் கல்லூரி கட்டிடம், 8 துறைகளுக்கான வகுப்பறை, ஆய்வகம் மற்றும் நூலக வசதி, 1000-ம் பேர் அமரும் கலை அரங்க கட்டிடம்.



மாணவ, மாணவியர் தங்கும் விடுதி, ஆசிரியர், பணியாளர் குடியிருப்பு, மருத்துவ அலுவலர்கள் குடியிருப்பு மற்றும் விளையாட்டு மைதான வசதிகளுடன் 11.48-ஏக்கர் நிலத்தில் 337-கோடி மதிப்பீட்டில் மூன்று தொகுதிகளாகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது‌.



திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில், கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள காணொளி காட்சி அரங்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித், அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் உள்ளிட்டோர் விழா மேடைக்கு வந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...