கோவையில் பொங்கல் சிறப்பு பரிசு பொதுமக்களுக்கு வழங்கியதில் தி.மு.க ரூ.400 கோடி ஊழல் - பா.ஜ.க. மாநில விவசாய அணி தலைவர் குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் வெல்லம், கோதுமை, ரவை பொருட்கள் தயாராக இருந்தும் மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற பகுதிகளில் கொள்முதல் செய்து விவசாயிகளை புறக்கணித்ததாக கூறினார்.


கோவை: கோவையில் பொங்கல் சிறப்பு பரிசு பொதுமக்களுக்கு வழங்கியதில் தி.மு.க 400 கோடி ஊழல் என பா.ஜ.க. மாநில விவசாய அணித் தலைவர் பேட்டி அளித்துள்ளார்.



பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் பஞ்சாப் செல்லும்பொழுது, பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் அரசு உரிய பாதுகாப்பு எடுக்காமல் அலட்சியம் செய்ததையடுத்து காங்கிரஸ் கட்சியை கண்டிக்கும் விதமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

பின்னர், விவசாயிகளின் வாழ்வாதாரமான கோதவாடி குளம் பகுதியில் தமிழ்நாடு விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.



பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறும் பொழுது,

பொள்ளாச்சி மாவட்டத்தில் தேங்காய் தொட்டி ரூ. 27,000க்கு விற்று வந்தது. தற்போது திமுக பொறுப்பேற்று ரூபாய் 10,000க்கு விற்கப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் விவசாயிகளை குறி வைத்து மிரட்டி திமுக கட்சியில் ஆட்களைச் சேர்க்கின்றனர்.

அ.தி.மு.க ஆட்சி காலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கலுக்கு பொருட்கள் கொடுத்து, பணம் தந்து தை திருநாளை கொண்டாட வைத்தார். தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு பொங்கலுக்கு கரும்பு, வெல்லம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கு ரூ. 1297 கோடி ஒதுக்கி, அதில் பொருட்கள் விலை ரூபாய் 600 ஆகும். இதில் ரூபாய் 400 கோடி திமுக ஊழல் செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் வெல்லம் கோதுமை ரவை பொருட்கள் தயாராக உள்ள நிலையில், மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற பகுதிகளில் கொள்முதல் செய்து விவசாயிகளை புறக்கணிக்கும் செயல்களில் திமுக ஈடுபடுகின்றது எனவும் தமிழகத்தில் விடியல் ஆட்சி இல்லை விடியாத ஆட்சி என தெரிவித்தார்.

இதில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தராஜன், மருதாசலம், செந்தில், பாபா ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...