போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த அந்த 2 பேரும் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இருந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை: கோவையில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடந்த ரயில் விபத்தில் இருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை போத்தனூர் ரயில்வே தண்டவாளம் கோவை ரயில் நிலையம் நடை மேடை அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்ததாகக் கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த வாலிபரின் உடலைச் சோதனை செய்தனர்.
பின்னர் அந்த வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோன்று கோவை பீளமேடு ரயில்வே தண்டவாளம் சாய்பாபா கோவில் அருகே 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த அந்த 2 பேரும் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? அவர்கள் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இருந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை போத்தனூர் ரயில்வே தண்டவாளம் கோவை ரயில் நிலையம் நடை மேடை அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்ததாகக் கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த வாலிபரின் உடலைச் சோதனை செய்தனர்.
பின்னர் அந்த வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோன்று கோவை பீளமேடு ரயில்வே தண்டவாளம் சாய்பாபா கோவில் அருகே 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த அந்த 2 பேரும் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? அவர்கள் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இருந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.