கோவையில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடந்த ரயில் விபத்து: இருவர் பலி

போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த அந்த 2 பேரும் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இருந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கோவை: கோவையில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடந்த ரயில் விபத்தில் இருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை போத்தனூர் ரயில்வே தண்டவாளம் கோவை ரயில் நிலையம் நடை மேடை அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்ததாகக் கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த வாலிபரின் உடலைச் சோதனை செய்தனர்.

பின்னர் அந்த வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோன்று கோவை பீளமேடு ரயில்வே தண்டவாளம் சாய்பாபா கோவில் அருகே 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த அந்த 2 பேரும் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? அவர்கள் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இருந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...