கத்திக்குத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை: கோவையில் அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவர்களுக்கு இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென மோதல் ஏற்பட்டது.
அப்போது, ஒரே ஒரு மாணவனை 15 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மாணவர்கள் தன்னை தாக்கிய மாணவர்களிடம் சென்று கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியதில் 3 மாணவர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது.
ஒரு மாணவருக்கு தலையில் ஆழமாக குத்து விழுந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும், இதுகுறித்து அவர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் மாணவர் மற்றும் அதே பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவர் ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்நிலையில், மற்ற மாணவர்களுக்கும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கத்திக்குத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவர்களுக்கு இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென மோதல் ஏற்பட்டது.
அப்போது, ஒரே ஒரு மாணவனை 15 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மாணவர்கள் தன்னை தாக்கிய மாணவர்களிடம் சென்று கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியதில் 3 மாணவர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது.
ஒரு மாணவருக்கு தலையில் ஆழமாக குத்து விழுந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும், இதுகுறித்து அவர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் மாணவர் மற்றும் அதே பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவர் ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்நிலையில், மற்ற மாணவர்களுக்கும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கத்திக்குத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.