கோவை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.59.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு..!

இந்த ஆய்வின்போது, கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் கட்டிமுடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.59.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டிடப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து இன்று நேரில் ஆய்வு செய்த பின்னர், பொறியாளர்களிடம் மழைநீர் கால்வாய் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப. அவர்கள் அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதல் தளத்தில் ரூ.59.60 இலட்சம் மதிப்பீட்டில் 4900 சதுர அடி வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறை கட்டடம் கட்டும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டார்.



அப்போது, கட்டுமான பணிகளை தரமாகவும் விரைவாகவும் கட்டிமுடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அம்ரூத் திட்டத்தில் இளங்கோ நகர் பூங்கா பராமரிப்பு பணிகளையும், அப்பகுதி பொதுமக்களிடம் குப்பைகளை எவ்வாறு வழங்கி வருகிறார்கள் என்பதை கேட்டறிந்து, மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து வழங்கிட வேண்டுமென அறிவுறுத்தினார்.

பின்னர், இளங்கோ நகர் பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.



மேலும், அவினாசி சாலை முதல் விரியம்பாளையம் வரை கோல்டன் ரோடு பகுதியில் தற்போது பெய்த மழையில் சேதமடைந்த 885 தொலைவிற்கு தார் சாலை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமதிப்பு உடனடியாக தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் மாரிச்செல்வி, உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் குமார், மண்டல சுகாதார அலுவலர் முருகா, சுகாதார ஆய்வாளர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...