பொள்ளாச்சி அருகே தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி தர்ணா..!

தலித் இளைஞரை மாற்று சமூகத்தைச் சேர்ந்த மேஜர் ராமசாமி தூண்டுதலின் பேரில், தோட்டத்தில் வேலை செய்பவர்கள் கை, கால்களை கட்டி போட்டு கண்மூடித்தனமாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி, பொள்ளாச்சியில் சார் ஆட்சியர் அலுவலகத்தை பல்வேறு இயக்கங்கள் சார்பில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.



பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மக்கள் சக்தி நகரை சேர்ந்த 21 வயது இளைஞர் ஹரிஹரசுதாகர் என்பவர் அப்பகுதியில் உள்ள மேஜர் ராமசாமி என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.

இவர் சம்பள பிரச்சனை காரணமாக கடந்த சில வாரங்களாக அங்கு பணிக்குச் செல்லவில்லை என தெரிகிறது. இவர் பணியாற்றும் தோட்டத்தில் தங்கி வேலை பார்க்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹரிஹர சுதாகர் காதலித்து வந்த பெண்ணை பார்க்க நேற்று முன்தினம் அங்கு சென்றபோது, மேஜர் ராமசாமியின் தோட்டத்தில் வேலை பார்க்கும் சிலர், ஹரிஹரசுதாகரின் கை கால்களை கட்டி போட்டு அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த ஹரிஹரசுதாகர் வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ஆனைமலை போலீசார் மேஜர் ராமசாமி மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை.



எனவே, இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ் தேசிய விடுதலை இயக்கம், திராவிடர் கழகம் மற்றும் பாதிக்கப்பட்ட ஹரிஹரசுதாகர் உறவினர்கள் உள்ளிட்டோர் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலக நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும், ஆனைமலை காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு, நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலித் இளைஞர் ஹரிஹரசுதாகர்மாற்று சமூகத்தைச் சேர்ந்த மேஜர் ராமசாமி தூண்டுதலின் பேரில் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் கை, கால்களை கட்டி போட்டு கண்மூடித்தனமாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.

ஆனால், இதற்கு காரணமான மேஜர் ராமசாமி மீது ஆனைமலை காவல்துறை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை, எனவே, அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள், தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...