ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கழகம், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்து இருப்பதாக குற்றம் சாட்டினர்.
கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் திராவிடர் கழகத்தினர் நடத்தி வரும் பகுத்தறிவு படிப்பகம் முன்பு அமைக்கப்பட்ட பெரியார் சிலையின் மீது கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் செருப்பு மாலை மற்றும் காவி பொடி தூவியும் அவமதிப்பு செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து போத்தனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வெள்ளலூர் பகுதியில் அனைத்துக் கட்சி சார்பில் பெரியார் சிலையை அவமதித்தவர்களை மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்து இருப்பதாகவும், இதேபோல தொடர்ந்து பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும், குற்றவாளிகள் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து போத்தனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வெள்ளலூர் பகுதியில் அனைத்துக் கட்சி சார்பில் பெரியார் சிலையை அவமதித்தவர்களை மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்து இருப்பதாகவும், இதேபோல தொடர்ந்து பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும், குற்றவாளிகள் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர்.