தாராபுரம் வடுகபாளையம் பகுதியில் தனியார் இரும்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடுகபாளையம் பகுதியில் தனியார் இரும்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த வடுகபாளையம் பகுதியில் தனியார் இரும்பு ஆலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதியைச் சுற்றியுள்ள சங்கராண்டாம்பாளையம், சூரியநல்லூர் கண்ணாங்கோவில் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இங்கு இரும்பு ஆலை அமையும் பட்சத்தில் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாக வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் மிக கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே, இங்கு இரும்பு ஆலை அமைக்க அரசு அனுமதிக்கக்கூடாது என பல்வேறு கட்டமாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் தாராபுரம் வட்டாட்சியர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் என அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனிடையே, தனியார் இரும்பு ஆலை அமைக்க அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 5 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவதாக நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த வடுகபாளையம் பகுதியில் தனியார் இரும்பு ஆலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதியைச் சுற்றியுள்ள சங்கராண்டாம்பாளையம், சூரியநல்லூர் கண்ணாங்கோவில் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இங்கு இரும்பு ஆலை அமையும் பட்சத்தில் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாக வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் மிக கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே, இங்கு இரும்பு ஆலை அமைக்க அரசு அனுமதிக்கக்கூடாது என பல்வேறு கட்டமாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் தாராபுரம் வட்டாட்சியர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் என அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனிடையே, தனியார் இரும்பு ஆலை அமைக்க அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 5 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவதாக நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.