கொரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கூறி தமிமுன் அன்சாரி உட்பட 69 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 69 பேர் மீது கொரோனா விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் கோவையில் நேற்று முன்தினம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வில்லை என்று கூறி தமிமுன் அன்சாரி உட்பட 69 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் கோவையில் நேற்று முன்தினம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வில்லை என்று கூறி தமிமுன் அன்சாரி உட்பட 69 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.