கோவையில் கொரோனா விதிமீறல்: ரூ.2.89 லட்சம் அபராதம் வசூல்

கொரோனா விதிகளை மீறியதாக, கோவை மாவட்டத்தில் 3-நாள்களில் 1,284-வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2-லட்சத்து 89-ஆயிரத்து 800-அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கொரோனா விதிகளை மீறியதாக, கோவை மாவட்டத்தில் 3-நாள்களில் 1,284-வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2-லட்சத்து 89-ஆயிரத்து 800-அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-

கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவை மாவட்டத்தில் 41-இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாலையில் தேவையின்றி சுற்றித்திரிபவா்கள்,கொரோனா தடுப்பு விதிமீறலில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க 10-நான்கு சக்கர வாகனங்களும், 61-இருசக்கர வாகனங்களும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கோவை மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13-சோதனைச் சாவடிகளிலும், 2-தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 48-மணி நேரத்துக்கு முன்பாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கோவை மாவட்டத்தில் சுமார் 500-காவலர்கள் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும்கொரோனா வழிகாட்டுதலை மீறியவர்கள் என கடந்த ஜனவரி 6-ஆம் தேதி முதல் 3-நாள்களில் மட்டும் 1,284-வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 2-லட்சத்து 89-ஆயிரத்து 800-அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...