கோவையில் கொரோனா விதிமீறல்: ரூ.2.89 லட்சம் அபராதம் வசூல்

கொரோனா விதிகளை மீறியதாக, கோவை மாவட்டத்தில் 3-நாள்களில் 1,284-வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2-லட்சத்து 89-ஆயிரத்து 800-அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கொரோனா விதிகளை மீறியதாக, கோவை மாவட்டத்தில் 3-நாள்களில் 1,284-வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2-லட்சத்து 89-ஆயிரத்து 800-அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-

கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவை மாவட்டத்தில் 41-இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாலையில் தேவையின்றி சுற்றித்திரிபவா்கள்,கொரோனா தடுப்பு விதிமீறலில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க 10-நான்கு சக்கர வாகனங்களும், 61-இருசக்கர வாகனங்களும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கோவை மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13-சோதனைச் சாவடிகளிலும், 2-தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 48-மணி நேரத்துக்கு முன்பாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கோவை மாவட்டத்தில் சுமார் 500-காவலர்கள் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும்கொரோனா வழிகாட்டுதலை மீறியவர்கள் என கடந்த ஜனவரி 6-ஆம் தேதி முதல் 3-நாள்களில் மட்டும் 1,284-வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 2-லட்சத்து 89-ஆயிரத்து 800-அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...