கோவையில் ரெயில் என்ஜின் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2-பேர் பலி

கோவை அருகே ரெயில் என்ஜின் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2-பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை அருகே ரெயில் என்ஜின் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2-பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (17), விஜய கிருஷ்ணன் (18) மற்றும் ஸ்ரீகாந்த் (18). இதில் விஜய கிருஷ்ணன், ஸ்ரீ காந்த் ஆகியோர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தனர். மணிகண்டன் வேலை தேடி வந்தார்.

இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று இரவு 7.30 மணியளவில் கவுண்டம்பாளையம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் சொல்போனை பார்த்தவாறு சென்றதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவையை நோக்கி வந்த ரெயில் என்ஜின் ஒன்று எதிர்பாராதவிதமாக மணிகண்டன், விஜயகிருஷ்ணன் ஆகியோர் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

ஆனால் ஸ்ரீகாந்த் மட்டும் ரெயில் என்ஜினை பார்த்ததும் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று இரவில் ரெயில் என்ஜினில் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...