கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், நேற்று (08.01.2022) அனைத்து உட்கோட்டத்திலும் "மக்கள் குறைதீர்க்கும் நாள்" நடத்தப்பட்டு பொது மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், நேற்று (08.01.2022) அனைத்து உட்கோட்டத்திலும் "மக்கள் குறைதீர்க்கும் நாள்" நடத்தப்பட்டு பொது மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டத்தில்-47 மனுக்களுக்கும், பேரூர் உட்கோட்டத்தில்-56 மனுக்களுக்கும், கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில்-67 மனுக்களுக்கும், பொள்ளாச்சி உட்கோட்டத்தில்-15 மனுக்களுக்கும், வால்பாறை உட்கோட்டத்தில்-09 மனுக்களுக்கும், மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில்-53 மனுக்களுக்கும், மற்றும் மாவட்ட குற்றப்பிரிவில்-11 மனுக்களுக்கும் மொத்தம் 258 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதத்திலும் முதல் சனிக்கிழமை அன்று "மக்கள் குறைதீர்க்கும் நாள்" நடத்தப்பட்டு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இம்முயற்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டத்தில்-47 மனுக்களுக்கும், பேரூர் உட்கோட்டத்தில்-56 மனுக்களுக்கும், கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில்-67 மனுக்களுக்கும், பொள்ளாச்சி உட்கோட்டத்தில்-15 மனுக்களுக்கும், வால்பாறை உட்கோட்டத்தில்-09 மனுக்களுக்கும், மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில்-53 மனுக்களுக்கும், மற்றும் மாவட்ட குற்றப்பிரிவில்-11 மனுக்களுக்கும் மொத்தம் 258 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதத்திலும் முதல் சனிக்கிழமை அன்று "மக்கள் குறைதீர்க்கும் நாள்" நடத்தப்பட்டு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இம்முயற்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.