ஞாயிறு ஊரடங்கு காரணமாகத் திருப்பூர் மாநகர் முழுவதும் வெறிச்சோடியது. தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை கண்காணித்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.
திருப்பூர் :ஞாயிறு ஊரடங்கு காரணமாகத் திருப்பூர் மாநகர் முழுவதும் வெறிச்சோடியது. தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை கண்காணித்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.
தமிழகத்தில் கொரானா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரிப்பதால் அதனை கட்டுப்படுத்திட அரசுதமிழகத்தில் ஞாயிறு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இன்று ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில்பேருந்துகள் ஆட்டோக்கள் இருசக்கர வாகனங்கள் செல்லாமல் சாலைகள்வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் பால் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைத் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. தென்னம்பாளையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், புஷ்பா ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் முகாமிட்டு வாகன சோதனையிட்டுக் கண்காணித்து வருவதோடு வாகனங்கள் மூலமாக நகர் முழுவதும் சுற்றிக் கண்காணித்து வருகின்றனர்.
அத்தியாவசிய பணிகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், நாளிதழ்கள் விற்பனை போன்றவை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு நேரடியாக பார்சல் சப்ளை செய்வதற்கு ஒரு சில உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ தேவைகளைத் தவிர வாகனங்களில் வருபவர்களைக் கண்காணித்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். முழு ஊரடங்கு என்பதால் திருப்பூர் மாநகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழகத்தில் கொரானா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரிப்பதால் அதனை கட்டுப்படுத்திட அரசுதமிழகத்தில் ஞாயிறு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இன்று ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில்பேருந்துகள் ஆட்டோக்கள் இருசக்கர வாகனங்கள் செல்லாமல் சாலைகள்வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் பால் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைத் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. தென்னம்பாளையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், புஷ்பா ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் முகாமிட்டு வாகன சோதனையிட்டுக் கண்காணித்து வருவதோடு வாகனங்கள் மூலமாக நகர் முழுவதும் சுற்றிக் கண்காணித்து வருகின்றனர்.
அத்தியாவசிய பணிகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், நாளிதழ்கள் விற்பனை போன்றவை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு நேரடியாக பார்சல் சப்ளை செய்வதற்கு ஒரு சில உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ தேவைகளைத் தவிர வாகனங்களில் வருபவர்களைக் கண்காணித்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். முழு ஊரடங்கு என்பதால் திருப்பூர் மாநகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.