அமலுக்கு வந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, வாளையாறு சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் கனரக வாகனங்கள் மட்டுமே வந்த வண்ணம் உள்ளன.
கோவை: அமலுக்கு வந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, வாளையாறு சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வார நாடுகளில் இரவு நேர ஊரடங்கும் இந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் கோவையில் முக்கிய சாலைகளான காந்திபுரம் கிராஸ்கட் சாலை, அவிநாசி சாலை, டவுன்ஹால் உக்கடம் ஆகிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இந்நிலையில் தமிழக கேரள எல்லையான வாளையாறு சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் கனரக வாகனங்கள் மட்டுமே வந்த வண்ணம் உள்ளன.

இதர வாகனங்களில் வருவோர் அவரச தேவைகளுக்கு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழோ, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே கோவைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் கோவை மாநகர் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வார நாடுகளில் இரவு நேர ஊரடங்கும் இந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் கோவையில் முக்கிய சாலைகளான காந்திபுரம் கிராஸ்கட் சாலை, அவிநாசி சாலை, டவுன்ஹால் உக்கடம் ஆகிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இந்நிலையில் தமிழக கேரள எல்லையான வாளையாறு சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் கனரக வாகனங்கள் மட்டுமே வந்த வண்ணம் உள்ளன.
இதர வாகனங்களில் வருவோர் அவரச தேவைகளுக்கு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழோ, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே கோவைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் கோவை மாநகர் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.