கோவையில் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் கைவரிசை காட்டிய வேலைக்காரப் பெண் கைது..!

புகாரின் பேரில், இரண்டு வீடுகளில் திருடப்பட்ட 22 சவரன் நகையை மீட்ட போலீசார், அந்த பெண்ணின் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் வேலை செய்த வீடுகளில் கைவரிசை காட்டிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சாய்பாபா காலனியை அடுத்த கோவில் பகுதியில் தனியார் அப்பார்ட்மெண்ட் உள்ளது. இங்கு பெருமாள் என்பவரின் மகன் பிரசாந்த் (29) குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தோடு பழனி கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினர். வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார் வீட்டில் உள்ள மற்ற பீரோக்கள் முழுவதும் தேடி பார்த்தனர். நகை எங்கும் இல்லாததால் பிரசாந்த் சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரில் தங்களது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் சூர்யா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் பணிபுரிந்து வந்த இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள் பிரபு என்பவரின் மனைவி சூர்யா (30) என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் பிரசாந்த் வீட்டில் இருந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் திருடி வைத்திருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல, அதே அபார்ட்மெண்டில் குடியிருந்து வரும் ராமமூர்த்தி என்பவரின் மகன் விசுவநாத் (42) என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடும்பத்தோடு சொந்த ஊருக்கு சென்று விட்டார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த பொழுது அவரது வீட்டில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது.

இதுகுறித்து அவரது வீட்டிலும் பணிபுரிந்த சூரியாவிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் சூர்யா தற்போது சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து விஸ்வநாதன் அந்த பெண்ணை வேலையை விட்டு நிறுத்தினார்.

இந்நிலையில், பிரசாந்த் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தை அடுத்து விஸ்வநாத் சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் பிரசாந்த் வீட்டில் கைவரிசை காட்டி 12 பவுன் நகைகளை திருடிய சூர்யா என்ற வீட்டு வேலைக்கார பெண் தான் விஸ்வநாத் வீட்டிலும் 10 பவுன் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து வேலைக்கார பெண் சூர்யாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...