ஆலயத்தின் பாதிரியார் பேட்ரிக் இருதயராஜ் அளித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை செல்வபுரம் அருகே சர்ச் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வபுரம் அடுத்த பேரூர் மெயின்ரோட்டில் அண்ணா அன்னை வேளாங்கண்ணி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பாதிரியாராக பேட்ரிக் இருதயராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சர்ச் ஆலயத்தை பூட்டிவிட்டு அவர் வீட்டிற்குச் சென்றார். மீண்டும் நேற்று காலை வந்து பார்த்த பொழுது ஆலயத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
மேலும், உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஆலயத்தின் பாதிரியார் பேட்ரிக் இருதயராஜ் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை செல்வபுரம் அடுத்த பேரூர் மெயின்ரோட்டில் அண்ணா அன்னை வேளாங்கண்ணி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பாதிரியாராக பேட்ரிக் இருதயராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சர்ச் ஆலயத்தை பூட்டிவிட்டு அவர் வீட்டிற்குச் சென்றார். மீண்டும் நேற்று காலை வந்து பார்த்த பொழுது ஆலயத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
மேலும், உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஆலயத்தின் பாதிரியார் பேட்ரிக் இருதயராஜ் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.