மேலும், அந்த காரை முறைப்படி பதிவு செய்யாமல் போலி எண்ணை காரில் பொருத்தி ஓட்டி வந்துள்ளார்.
கோவை: கோவையில் போலி ஆவணங்களை கொடுத்து வங்கியில் கடன் பெற்று கார் வாங்கி மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை காளப்பட்டி ரோடு நேரு நகர் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மண்டல மேலாளர் இன்பராசா (46) என்பவர் பீளமேடு போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், கடந்த 2016ம் ஆண்டு பீளமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற நபர் போலி ஆவணங்களை கொடுத்து ஐந்து லட்ச ரூபாய் வங்கியிலிருந்து கடனாக வாங்கி உள்ளார். அந்த பணத்தை வைத்து சேலத்தில் ஒரு கார் வாங்கியுள்ளார்.
மேலும் அந்த காரை முறைப்படி பதிவு செய்யாமல் போலி எண்ணை காரில் பொருத்தி ஓட்டி வந்துள்ளார். மேலும் வங்கியில் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதுகுறித்து பலமுறை வங்கியிலிருந்து தொடர்பு கொண்ட போதும் சரியான பதிலளிக்காமல் இருந்து வருகிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் கார்த்திக் என்பவர் மீது போலியான ஆவணங்களை கொடுத்து வங்கியில் கடன் பெற்று கார் வாங்கியதாகவும், பணத்தை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி உள்ளதாகவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை காளப்பட்டி ரோடு நேரு நகர் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மண்டல மேலாளர் இன்பராசா (46) என்பவர் பீளமேடு போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், கடந்த 2016ம் ஆண்டு பீளமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற நபர் போலி ஆவணங்களை கொடுத்து ஐந்து லட்ச ரூபாய் வங்கியிலிருந்து கடனாக வாங்கி உள்ளார். அந்த பணத்தை வைத்து சேலத்தில் ஒரு கார் வாங்கியுள்ளார்.
மேலும் அந்த காரை முறைப்படி பதிவு செய்யாமல் போலி எண்ணை காரில் பொருத்தி ஓட்டி வந்துள்ளார். மேலும் வங்கியில் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதுகுறித்து பலமுறை வங்கியிலிருந்து தொடர்பு கொண்ட போதும் சரியான பதிலளிக்காமல் இருந்து வருகிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் கார்த்திக் என்பவர் மீது போலியான ஆவணங்களை கொடுத்து வங்கியில் கடன் பெற்று கார் வாங்கியதாகவும், பணத்தை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி உள்ளதாகவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.