கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க 5 மருத்துவக் குழு நியமனம்..!

மாநகராட்சியில் உள்ள 5 மண்டலத்துக்கும் தலா ஒரு மருத்துவக் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் ஒரு டாக்டர், ஒரு நர்சு ஆகியோர் இருப்பர்.


கோவை: கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க 5 மருத்துவக் குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

கோவை மாநகராட்சி பகுதியில் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 300-ஐ தாண்டிவிட்டது. இதனால் தொற்று பரவல் வேகத்தை கட்டுப்படுத்த மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, நேற்று முதல் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், உதவி நகர் நல அலுவலர் வசந்த் திவாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது:-

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளது.

மாநகராட்சியில் உள்ள 5 மண்டலத்துக்கும் தலா ஒரு மருத்துவக் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் ஒரு டாக்டர், ஒரு நர்சு ஆகியோர் இருப்பர். கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானவர்களின் வீட்டிற்கு மருத்துவக் குழு நேரில் சென்று உடல்நிலையை ஆய்வு செய்வார்கள்.

இதில், இணை நோய், கூடுதல் பாதிப்பு உள்ளவர்களை மருத்துவமனைக்கு அனுப்புவார்கள். தொற்று வீரியம் குறைந்த நோயாளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிப்பார்கள்.

இதன் மூலம் மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படாது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை பாதுகாப்பு கவச உடையுடன் மருத்துவக் குழு சந்தித்து ஆலோசனை வழங்கும். அவர்கள், காய்ச்சல், ஆக்ஸிஜன் அளவை கண்டறிந்து தொடர் சிகிச்சை வழங்குவார்கள். தேவைப்பட்டால் மருத்து, மாத்திரை வழங்கப்படும்.

மேலும் ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மூலமும் இந்த பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...