குற்றம் சாட்டப்பட்ட திபு, ஜம்ஷீர் அலி, சதீஸன், பிஜின் குட்டி, ஜிதின் ஜாய் ஆகிய 5 பேரிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை: கோவையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 5 பேரிடம் கோவை பி.ஆர்.எஸ் வளாகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடநாடு வழக்கு தொடர்பாக கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட திபு, ஜம்ஷீர் அலி, சதீஸன், பிஜின் குட்டி, ஜிதின் ஜாய் ஆகிய 5 பேரிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.
மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் முத்துச்சாமி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் தனிப்படை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் விசாரணை நடைபெறும் கோவை காவலர் பயிற்சி பள்ளிக்கு வந்துள்ளார். வழக்கு தொடர்பாக தற்போது வரை 150 பேரிடம் கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள 12 பேரில் விபத்தில் பலியான கனகராஜ் உறவினர்களான சேலத்தை சேர்ந்த தனபால், ரமேஷ் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் சிறையில் உள்ளனர்.
மேலும், மீதமுள்ள 9 பேரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.