வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, நீண்ட நேரமாகியும் வராத நிலையில், மான் குட்டி எழுந்து மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது.
கோவை: கோவை அருகே லாரி மோதி மான்குட்டி காயமடைந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே நேற்று நள்ளிரவு மான் குட்டி ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது, அந்த வழியாக வந்த லாரி மான்குட்டி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மான்குட்டி படுகாயம் அடைந்தது. அப்போது, ஈச்சனாரி 4 சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் கதிரேசன் மான் குட்டியை மீட்டு தண்ணீர் கொடுத்து முதலுதவி அளித்து, மதுக்கரை போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வரவில்லை. இதையடுத்து, மான் குட்டி எழுந்து மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது.
கோவை ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே நேற்று நள்ளிரவு மான் குட்டி ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது, அந்த வழியாக வந்த லாரி மான்குட்டி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மான்குட்டி படுகாயம் அடைந்தது. அப்போது, ஈச்சனாரி 4 சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் கதிரேசன் மான் குட்டியை மீட்டு தண்ணீர் கொடுத்து முதலுதவி அளித்து, மதுக்கரை போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வரவில்லை. இதையடுத்து, மான் குட்டி எழுந்து மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது.