வால்பாறை அருகே தேயிலைத் தோட்ட குடியிருப்பில் தீ விபத்து - 7 வீடுகள் எரிந்து சேதம்..!

அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் மக்கள் எவ்வித பாதிப்பு இன்றி தப்பினர். தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


கோவை: வால்பாறை அருகே தேயிலைத் தோட்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் தீ பிடித்து எரிந்து சேதமானது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே பழைய வால்பாறை எஸ்டேட் பகுதியில் இரவு சுமார் 10.45 மணி அளவில் தேயிலைத் தோட்ட குடியிருப்பு பகுதியில் நடராஜன் என்பவர் வீட்டில் மின் கசிந்து தீ பிடித்துள்ளது. தீ பிடித்து புகை வந்ததால் வீட்டிலிருந்தவர்கள் வீட்டை வீட்டு வெளியேறினர்.

இதையடுத்து, சத்தம்போட்டு அக்கம்பக்கத்தினரை வரவழைத்தனர்.



தீ அணையாமல் அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கு தீப்பிடித்து எரிய தொடங்கியது.



வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.



சிறிது நேரத்திற்குள் ராஜேந்திரன், நடராஜ், சுரேஷ், கனகா, நஞ்சன் அலி, நஜிமுத்தி, மாலா உசேன் ஆகியோரின் 7 வீட்டிற்கு தீ பரவியது.



பின்னர், தகவல் அறிந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களுமே முற்றிலும் சேதமடைந்தது. இதில் வீட்டில் இருந்த டிவி, கட்டில், சமையல் பொருள், துணிமணிகள் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், பள்ளிச் சான்றிதழ், ஆதார் அட்டை போன்றவைகள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தது.

தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.



தீ பிடித்த சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...