கோவையில் ஆபாச படத்தில் நடித்ததாக கூறி மனைவியை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு

ஆபாசப்படத்தில் நடித்ததாக கூறி மனைவியைத் தாக்கிய முன்னாள் போலீஸ்காரர் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கோவை: கோவையில் ஆபாசப்படத்தில் நடித்ததாக கூறி மனைவியைத் தாக்கிய முன்னாள் போலீஸ்காரரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் துர்காதேவி வயது 35, ஐ.டி ஊழியர்.

இவர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார் அதில் கூறியிருப்பதாவது:-

எனக்கு 2002-ஆம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்து பணியாற்றிய சேலத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் 44, என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது அவர் பணியில் இல்லை.

எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் தான் எனது கணவர் ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து என்னை இரண்டாவதாகத் திருமணம் செய்தது தெரிந்தது.

இதுகுறித்து நான் கேட்டபோது எனக்கும் எனது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நான் எனது கணவரைக் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரிந்து பின்னர் நான் எனது மகனுடன் வசித்து வருகிறேன்.

இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி என்னை எனது கணவர் செல்போனில் அழைத்துப் பேசினார்.

ஆபாச படத்தில் நடித்துள்ளாய், இந்த வீடியோ என்னிடம் உள்ளது. அந்த வீடியோ உனக்கு வேண்டுமென்றால் கோவை காந்திபுரத்துக்கு வா என்றழைத்தார்.

அதிர்ச்சி அடைந்த நான் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் சென்றேன். அங்கு வைத்து வீடியோவை காண்பிக்குமாறு கேட்டேன். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அவர் பொது இடத்தில் வைத்து என்னைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

ஆனால் அவரிடம் எந்த வீடியோவும் இல்லை அவர் வேண்டுமென்றே என்னை ஏதாவது வழக்கில் சிக்க வைப்பதற்காக இந்த செயலை செய்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் மனைவியை அழைத்துத் தாக்கிய முன்னாள் போலீஸ்காரர் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...