கருமத்தம்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

கருமத்தம்பட்டி அருகே கணவருக்கு இறுதி காரியம் செய்ய சென்றபோது வீட்டின் கதவை உடைத்து 30-பவுன் நகை, 1- லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கருமத்தம்பட்டி அருகே கணவருக்கு இறுதி காரியம் செய்யச் சென்றபோது நோட்டமிட்ட திருடர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் தட்டியங்காடு தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் (57). இவர் கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது இறப்பு 30 நாள் காரியத்திற்காகச் சொந்த ஊரான பல்லடத்துக்கு கடந்த சனிக்கிழமை சியாமளா மற்றும் குடும்பத்தினர் சென்றனர்.

இன்று காலை அவர்கள் கருமத்தம்பட்டி திரும்பினர். அப்போது வீட்டின் கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்குப் படுக்கை அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 30-பவுன் தங்க நகை மற்றும் 1-லட்ச ரூபாய் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

சியாமளா குடும்பத்தினர் வெளியூர் செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீடு புகுந்து கொள்ளை அடித்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. பாண்டிய ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அங்கு பதிவான ரேகைகளைக் கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பழைய குற்றவாளிகள் அல்லது புதிய நபர்களை என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...