கோவையில் பெண் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்கள் தப்பியோட்டம்

கோவையில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதா மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தர்மபுரியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் இவரது மனைவி ராதா வயது 34, இவர்களுக்கு 2-மகள்கள் உள்ளனர். ராதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ராதா தனது கணவரைப் பிரிந்து 8-மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். பின்னர் அம்மன் குளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி இருந்து கட்டிட வேலைக்குச் சென்று வந்தார்.

நேற்று மாலையில் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய அவர் அந்த பகுதியில் உள்ள மளிகைக் கடைக்குப் பால் வாங்குவதற்காகச் சென்றார். பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே சென்றபோது இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர் திடீரென ராதாவின் மீது ஆசிட் வீசினார். இதில் ராதாவின் இடது பக்கம் முகம் தோள்பட்டை இடதுகை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது.

இதனால் வேதனை ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் ராதா அலறித் துடித்தார். அந்த வழியாகச் சென்றவர்கள் ராதாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதா மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...