கோவையில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதா மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தர்மபுரியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் இவரது மனைவி ராதா வயது 34, இவர்களுக்கு 2-மகள்கள் உள்ளனர். ராதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ராதா தனது கணவரைப் பிரிந்து 8-மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். பின்னர் அம்மன் குளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி இருந்து கட்டிட வேலைக்குச் சென்று வந்தார்.
நேற்று மாலையில் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய அவர் அந்த பகுதியில் உள்ள மளிகைக் கடைக்குப் பால் வாங்குவதற்காகச் சென்றார். பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
வீட்டின் அருகே சென்றபோது இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர் திடீரென ராதாவின் மீது ஆசிட் வீசினார். இதில் ராதாவின் இடது பக்கம் முகம் தோள்பட்டை இடதுகை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது.
இதனால் வேதனை ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் ராதா அலறித் துடித்தார். அந்த வழியாகச் சென்றவர்கள் ராதாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதா மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
தர்மபுரியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் இவரது மனைவி ராதா வயது 34, இவர்களுக்கு 2-மகள்கள் உள்ளனர். ராதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ராதா தனது கணவரைப் பிரிந்து 8-மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். பின்னர் அம்மன் குளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி இருந்து கட்டிட வேலைக்குச் சென்று வந்தார்.
நேற்று மாலையில் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய அவர் அந்த பகுதியில் உள்ள மளிகைக் கடைக்குப் பால் வாங்குவதற்காகச் சென்றார். பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
வீட்டின் அருகே சென்றபோது இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர் திடீரென ராதாவின் மீது ஆசிட் வீசினார். இதில் ராதாவின் இடது பக்கம் முகம் தோள்பட்டை இடதுகை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது.
இதனால் வேதனை ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் ராதா அலறித் துடித்தார். அந்த வழியாகச் சென்றவர்கள் ராதாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதா மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.