கோவையில் பெண் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்கள் தப்பியோட்டம்

கோவையில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதா மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தர்மபுரியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் இவரது மனைவி ராதா வயது 34, இவர்களுக்கு 2-மகள்கள் உள்ளனர். ராதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ராதா தனது கணவரைப் பிரிந்து 8-மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். பின்னர் அம்மன் குளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி இருந்து கட்டிட வேலைக்குச் சென்று வந்தார்.

நேற்று மாலையில் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய அவர் அந்த பகுதியில் உள்ள மளிகைக் கடைக்குப் பால் வாங்குவதற்காகச் சென்றார். பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே சென்றபோது இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர் திடீரென ராதாவின் மீது ஆசிட் வீசினார். இதில் ராதாவின் இடது பக்கம் முகம் தோள்பட்டை இடதுகை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது.

இதனால் வேதனை ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் ராதா அலறித் துடித்தார். அந்த வழியாகச் சென்றவர்கள் ராதாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதா மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...