காயம்பட்ட நிலையிலிருந்த மயிலை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், காவல் நிலையத்தில் ஒப்படைத்தவரைப் பாராட்டி காவல் ஆய்வாளர் சன்மானம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்னூர்: காயம்பட்ட நிலையிலிருந்த மயிலை மீட்டுக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தவரைப் பாராட்டி காவல் ஆய்வாளர் சன்மானம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இன்று காலை அவரது வீட்டிற்கு அருகே சாலையில் மயில் ஒன்று காயம் பட்ட நிலையில் இருப்பதைக் கண்டுள்ளார்.
உடனடியாக அருகில் சென்று பார்த்த பொழுது இறக்கைகளில் காயம் பட்டுப் பறக்க முடியாமல் இருந்ததை அறிந்தார்.

இதனையடுத்து காயம்பட்ட மயிலை மீட்ட ரமேஷ் மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யாவிடம் ஒப்படைத்தார்.
அன்னூர் காவல்துறை இச்சம்பவம் குறித்து சிறுமுகை வனச்சரகர் செந்தில் குமாருக்குத் தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த வனத்துறையினர் காயம் பட்ட மயிலுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.
காயம்பட்ட நிலையிலிருந்த மயிலை மீட்டுக் காவல் துறையினரிடம் ஒப்படைத்த ரமேஷிற்கு பாராட்டிய காவல் ஆய்வாளர் நித்யா அவருக்குச் சன்மானமும் வழங்கினார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இன்று காலை அவரது வீட்டிற்கு அருகே சாலையில் மயில் ஒன்று காயம் பட்ட நிலையில் இருப்பதைக் கண்டுள்ளார்.
உடனடியாக அருகில் சென்று பார்த்த பொழுது இறக்கைகளில் காயம் பட்டுப் பறக்க முடியாமல் இருந்ததை அறிந்தார்.
இதனையடுத்து காயம்பட்ட மயிலை மீட்ட ரமேஷ் மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யாவிடம் ஒப்படைத்தார்.
அன்னூர் காவல்துறை இச்சம்பவம் குறித்து சிறுமுகை வனச்சரகர் செந்தில் குமாருக்குத் தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த வனத்துறையினர் காயம் பட்ட மயிலுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.
காயம்பட்ட நிலையிலிருந்த மயிலை மீட்டுக் காவல் துறையினரிடம் ஒப்படைத்த ரமேஷிற்கு பாராட்டிய காவல் ஆய்வாளர் நித்யா அவருக்குச் சன்மானமும் வழங்கினார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.