ஆனைமலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் எதிரொலி: சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த புகாரையடுத்து 12-வயது பழங்குடியின சிறுமிக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது.


கோவை: கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த புகாரையடுத்து 12-வயது பழங்குடியின சிறுமிக்குப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது.

கோவை மாவட்டம் ஆனைமலை காவல்துறை நிலையத்தில் தன்னார்வலர் தன்ராஜ் என்பவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்த புகாரில், டாப்சிலிப் அருகே கடந்த 1-ந் தேதி 12-வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது.

இதில் ஈடுபட்ட மர்மநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். புகாரின் பேரில் காவல்துறை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அந்த சிறுமி வசிக்கக்கூடிய பகுதிக்கு காவல்துறை நேரில் சென்று, சிறுமியின் பெற்றோர் மற்றும் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினோம். முதற்கட்ட விசாரணையில், அந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை எனத் தெரிகிறது.

இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் புலன் விசாரணையை முடித்து, குறித்த காலத்திற்குள் இறுதி அறிக்கை செய்யச் சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

இதற்கிடையே பழங்குடியின சிறுமியை காவல்துறை மருத்துவ பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

இந்த அறிக்கை இன்று வர உள்ளது. மருத்துவ அறிக்கையின் முடிவிலேயே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்து உள்ளதா? என்பது குறித்த முழு விவரம் தெரியவரும்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...