கோவை திரையரங்கங்களில் இரவு நேர காட்சிகள் ரத்து

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நேற்றிரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கோவையில் உள்ள திரையரங்கங்களில் இரவு காட்சி ரத்து செய்யப்பட்டது.


கோவை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நேற்றிரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கோவையில் உள்ள திரையரங்கங்களில் இரவு காட்சி ரத்து செய்யப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகக் கோவையில் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.கோவை மாநகரில் 1,150 போலீசார் இரவு ஊரடங்கையொட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் வியாபாரம் செய்வோர் அனைவரும் இரவு 10 மணிக்கு முன்பாக கடையை மூடிவிட்டு வீடுகளுக்குச் சென்று விட்டனர்.

சிங்காநல்லூர், காந்திபுரம், உக்கடம், அவினாசி சாலை, திருச்சி சாலை உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்தவர்களைப் பிடித்து சோதனை செய்தனர். பின்னர் அவர்களை மீண்டும் இதுபோல் தேவையின்றி வெளியில் வரக் கூடாது என கூறி எச்சரித்துத் திருப்பி அனுப்பி வைத்தனர்.

இரவு ஊரடங்கு அறிவித்ததை அடுத்து நேற்று முதலே கோவையில் உள்ள சினிமா திரையரங்கங்களில் காலை, பகல் மற்றும் மாலை நேர காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டன. இரவு காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

இதனால் இரவு நேரங்களில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் திரையரங்கங்கள் நேற்று இரவு ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இரவு நேர காட்சிகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கினால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் திரையரங்கங்களில் அரசின் கொரோனா வழிகாட்டு முறைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...