கோவை திரையரங்கங்களில் இரவு நேர காட்சிகள் ரத்து

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நேற்றிரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கோவையில் உள்ள திரையரங்கங்களில் இரவு காட்சி ரத்து செய்யப்பட்டது.


கோவை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நேற்றிரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கோவையில் உள்ள திரையரங்கங்களில் இரவு காட்சி ரத்து செய்யப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகக் கோவையில் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.கோவை மாநகரில் 1,150 போலீசார் இரவு ஊரடங்கையொட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் வியாபாரம் செய்வோர் அனைவரும் இரவு 10 மணிக்கு முன்பாக கடையை மூடிவிட்டு வீடுகளுக்குச் சென்று விட்டனர்.

சிங்காநல்லூர், காந்திபுரம், உக்கடம், அவினாசி சாலை, திருச்சி சாலை உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்தவர்களைப் பிடித்து சோதனை செய்தனர். பின்னர் அவர்களை மீண்டும் இதுபோல் தேவையின்றி வெளியில் வரக் கூடாது என கூறி எச்சரித்துத் திருப்பி அனுப்பி வைத்தனர்.

இரவு ஊரடங்கு அறிவித்ததை அடுத்து நேற்று முதலே கோவையில் உள்ள சினிமா திரையரங்கங்களில் காலை, பகல் மற்றும் மாலை நேர காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டன. இரவு காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

இதனால் இரவு நேரங்களில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் திரையரங்கங்கள் நேற்று இரவு ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இரவு நேர காட்சிகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கினால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் திரையரங்கங்களில் அரசின் கொரோனா வழிகாட்டு முறைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...