திமுக பொறுப்பாளர் பால்பாண்டி தலைமையில் ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் சென்று பொருட்கள் சரியாக வினியோகிக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கோவை: கோவை வால்பாறை பகுதியில் 17,636 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில், கடந்த 4ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அதற்குப் பின்னர், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் நியாயவிலை கடைகள், ரேசன் கடைகள் மூலமாக பொருள்கள் விநியோகமும் செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள 60 எஸ்டேட் மற்றும் வால்பாறை டவுன் பகுதியில் மொத்தம் 17 ஆயிரத்து 636 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 4ம் தேதி முதல் 48 நியாயவிலை கடைகளிலும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ரேஷன் கடைகள் மூலமாக ஒவ்வொரு எஸ்டேட் பகுதிகளிலும் பொங்கல் பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்பு பொருட்கள் மற்றும் முழுக் கரும்பு வழங்கப்பட்டது.

இதில், திமுக பொறுப்பாளர் பால்பாண்டி தலைமையில் ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் சென்று பொருட்கள் சரியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வினியோகிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்து பொருட்களை வழங்கினர்.

இன்று நடுமலை, கருமலை எஸ்டேட் பகுதியில் திமுக பொறுப்பாளர் பால்பாண்டி தலைமையில் செல்வம் செந்தில், டென்சிங் அன்பரசன், ஆசைத்தம்பி பாண்டியராஜ் மற்றும் கலை, மாரிமுத்து, தங்கவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொங்கல் பொருட்களை வழங்கினர்.
தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில், கடந்த 4ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அதற்குப் பின்னர், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் நியாயவிலை கடைகள், ரேசன் கடைகள் மூலமாக பொருள்கள் விநியோகமும் செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள 60 எஸ்டேட் மற்றும் வால்பாறை டவுன் பகுதியில் மொத்தம் 17 ஆயிரத்து 636 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 4ம் தேதி முதல் 48 நியாயவிலை கடைகளிலும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ரேஷன் கடைகள் மூலமாக ஒவ்வொரு எஸ்டேட் பகுதிகளிலும் பொங்கல் பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்பு பொருட்கள் மற்றும் முழுக் கரும்பு வழங்கப்பட்டது.
இதில், திமுக பொறுப்பாளர் பால்பாண்டி தலைமையில் ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் சென்று பொருட்கள் சரியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வினியோகிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்து பொருட்களை வழங்கினர்.
இன்று நடுமலை, கருமலை எஸ்டேட் பகுதியில் திமுக பொறுப்பாளர் பால்பாண்டி தலைமையில் செல்வம் செந்தில், டென்சிங் அன்பரசன், ஆசைத்தம்பி பாண்டியராஜ் மற்றும் கலை, மாரிமுத்து, தங்கவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொங்கல் பொருட்களை வழங்கினர்.