தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் இருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அந்தந்த கோவில்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
கோவை: தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் உத்தரவுபடி கிணத்துக்கடவு பகுதியில் வழிபாட்டுத் தலங்கள் மூடல்- சூலக்கல் மாரியம்மன் கோவில் நுழைவாயிலில் நின்று பக்தர்கள் வழிபாடு
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 6ம் தேதி வியாழக்கிழமை முதல் இரவு ஊரடங்கும், வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களை மூடவும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, நேற்று வியாழக்கிழமை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பொன்மலை வேலாயுதசுவாமி கோயில், சிவலோகநாதர் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளது.
இதேபோல் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் மூடப்பட்டு, வழக்கம்போல் நடைபெறும் பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை என்பதால் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

ஆனால், கோவிலுக்குச் செல்ல அனுமதி இல்லாததால் கோவிலின் நுழைவாயிலில் முன்பு கற்பூர தீபம் ஏற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் இருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அந்தந்த கோவில்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 6ம் தேதி வியாழக்கிழமை முதல் இரவு ஊரடங்கும், வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களை மூடவும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, நேற்று வியாழக்கிழமை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பொன்மலை வேலாயுதசுவாமி கோயில், சிவலோகநாதர் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளது.
இதேபோல் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் மூடப்பட்டு, வழக்கம்போல் நடைபெறும் பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை என்பதால் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர்.
ஆனால், கோவிலுக்குச் செல்ல அனுமதி இல்லாததால் கோவிலின் நுழைவாயிலில் முன்பு கற்பூர தீபம் ஏற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் இருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அந்தந்த கோவில்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.