கொரோனா பரவல்: கிணத்துக்கடவு பகுதியில் வழிபாட்டுத் தலங்கள் மூடல் - சூலக்கல் மாரியம்மன் கோவில் நுழைவாயிலில் நின்று பக்தர்கள் வழிபாடு..!

தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் இருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அந்தந்த கோவில்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.


கோவை: தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் உத்தரவுபடி கிணத்துக்கடவு பகுதியில் வழிபாட்டுத் தலங்கள் மூடல்- சூலக்கல் மாரியம்மன் கோவில் நுழைவாயிலில் நின்று பக்தர்கள் வழிபாடு

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 6ம் தேதி வியாழக்கிழமை முதல் இரவு ஊரடங்கும், வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களை மூடவும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, நேற்று வியாழக்கிழமை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பொன்மலை வேலாயுதசுவாமி கோயில், சிவலோகநாதர் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளது.

இதேபோல் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் மூடப்பட்டு, வழக்கம்போல் நடைபெறும் பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை என்பதால் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர்.



ஆனால், கோவிலுக்குச் செல்ல அனுமதி இல்லாததால் கோவிலின் நுழைவாயிலில் முன்பு கற்பூர தீபம் ஏற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் இருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அந்தந்த கோவில்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...