வேறு இடம் இல்லாமல் அச்சத்துடன் அப்பகுதியிலேயே குடியிருந்து வருவதாகவும் பலமுறை அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் எந்த பலனும் இல்லை என குற்றம்சாட்டினர்.
கோவை: பொள்ளாச்சி அருகே சாலை விரிவாக்கத்திற்காக அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு மாற்று இடம் கோரி பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பொள்ளாச்சி மீன்கரை ரோடு பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்கக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
பொள்ளாச்சி மீன்கரைரோட்டில், சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து, சாலை விரிவாக்க பணிக்காக, நெடுஞ்சாலைத்துறையினர் எங்களை காலி செய்யுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.
ஆனால், எங்களுக்கு வேறு இடம் இல்லாமல் அச்சத்துடன் அப்பகுதியிலேயே குடியிருந்து வருகிறோம். பலமுறை அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் எந்த பலனும் இல்லை.
எனவே, நெடுஞ்சாலை துறையினரால், சாலை விரிவாக்கப் பணி காரணமாக, எங்கள் குடியிருப்புகள் அகற்றக்கூடிய நிலையில், எங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மீன்கரை ரோடு பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்கக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
பொள்ளாச்சி மீன்கரைரோட்டில், சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து, சாலை விரிவாக்க பணிக்காக, நெடுஞ்சாலைத்துறையினர் எங்களை காலி செய்யுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.
ஆனால், எங்களுக்கு வேறு இடம் இல்லாமல் அச்சத்துடன் அப்பகுதியிலேயே குடியிருந்து வருகிறோம். பலமுறை அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் எந்த பலனும் இல்லை.
எனவே, நெடுஞ்சாலை துறையினரால், சாலை விரிவாக்கப் பணி காரணமாக, எங்கள் குடியிருப்புகள் அகற்றக்கூடிய நிலையில், எங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.