அணிவகுப்புக்கான அனைத்து பயிற்சிகளும் மிகச்சிறந்த கலைஞர்களால் வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.
கோவை: டெல்லியில் வரும் ஜனவரி 26ல் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து மூன்று அணிகள் தேர்வாகியுள்ளன. அவற்றில் கோவையைச் சேர்ந்த ஸ்ரீ நாட்டிய நிகேதன் பள்ளி அணியும் தேர்வாகியுள்ளது.
இது குறித்து பள்ளி நிர்வாக இயக்குனர் மிதுலா ராய் கூறியதாவது:-
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மொத்தம், 75 அணிகள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகின. டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில், தமிழகத்தில் இருந்து, மூன்று அணிகள் தேர்வாகின.
எங்கள் அணி பரதநாட்டிய பிரிவில் தேர்வாகியுள்ளது. 14 பேர் இதற்காக தேர்வாகியுள்ளனர். வரும் 8-ம் தேதி முதல் வரும், 20 நாட்கள் டில்லியில் தங்கியிருக்க வேண்டும். அணிவகுப்புக்கான அனைத்து பயிற்சிகளும் மிகச்சிறந்த கலைஞர்களால் வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து பள்ளி நிர்வாக இயக்குனர் மிதுலா ராய் கூறியதாவது:-
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மொத்தம், 75 அணிகள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகின. டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில், தமிழகத்தில் இருந்து, மூன்று அணிகள் தேர்வாகின.
எங்கள் அணி பரதநாட்டிய பிரிவில் தேர்வாகியுள்ளது. 14 பேர் இதற்காக தேர்வாகியுள்ளனர். வரும் 8-ம் தேதி முதல் வரும், 20 நாட்கள் டில்லியில் தங்கியிருக்க வேண்டும். அணிவகுப்புக்கான அனைத்து பயிற்சிகளும் மிகச்சிறந்த கலைஞர்களால் வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.