2017 ஆம் காவலாளி கொலை வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு.

2017 ஆம் ஆண்டு மது குடிக்க பணம் தராததால், எட்டிமடையை சேர்ந்த சந்திரன் என்பவர், கோவை ஆடீஸ் வீதியில் காவலாளியாக வேலைப்பார்த்து வந்த ராமன் (55) என்பவரை கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளார்.


கோவை: மது குடிக்க பணம் தராத காவலாளியை கொலை செய்த சுமை தூக்கும் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, கோவை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கோவை நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமன் (55). இவர், ஆடீஸ் வீதியில் உள்ள ஒரு குடோனில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 24.3.2017 அன்று இரவு, ராமன் காவல் பணியில் இருந்த போது எட்டிமடையை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி சந்திரன் (43) என்பவர் குடோன் பகுதிக்கு வந்துள்ளார்.

அவர், மதுகுடிக்க பணம் கேட்டு ராமனிடம் தகராறு செய்துள்ளார், ராமன் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், ஆத்திரம் அடைந்த சந்திரன், காவலாளி ராமனை அடித்து உதைத்து கீழே தள்ளியுள்ளார். பின்னர், கீழே கிடந்த கல்லை எடுத்து ராமனின் தலையில் போட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் இந்த கொலையில் உடனடியாக துப்பு கிடைக்காததால், தீவிர விசாரணைக்கு பின்னர், 2018-ம் ஆண்டு இந்த கொலை வழக்கில் சந்திரன் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், ராமனை சாதிபெயரை சொல்லி திட்டியதும், தெரிய வந்ததால் சந்திரன் மீது கொலை மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை சட்டப்பிரிவும் (எஸ்.சி.-எஸ்.டி.) சேர்க்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இறுதி கட்ட வழக்கு விசாரணை நடைபெற்றது

வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சக்திவேல், குற்றம் சாட்டப்பட்ட சந்திரனுக்கு கொலை குற்றத்துக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1000 அபராதமும், எஸ்.சி.-எஸ்.டி. சட்டப்பிரிவில் மற்றொரு ஆயுள் தண்டனையும் விதித்து இரட்டை ஆயுள் தண்டனையை தீர்ப்பாக வழங்கினார் .

இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட சந்திரன் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...