2017 ஆம் காவலாளி கொலை வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு.

2017 ஆம் ஆண்டு மது குடிக்க பணம் தராததால், எட்டிமடையை சேர்ந்த சந்திரன் என்பவர், கோவை ஆடீஸ் வீதியில் காவலாளியாக வேலைப்பார்த்து வந்த ராமன் (55) என்பவரை கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளார்.


கோவை: மது குடிக்க பணம் தராத காவலாளியை கொலை செய்த சுமை தூக்கும் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, கோவை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கோவை நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமன் (55). இவர், ஆடீஸ் வீதியில் உள்ள ஒரு குடோனில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 24.3.2017 அன்று இரவு, ராமன் காவல் பணியில் இருந்த போது எட்டிமடையை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி சந்திரன் (43) என்பவர் குடோன் பகுதிக்கு வந்துள்ளார்.

அவர், மதுகுடிக்க பணம் கேட்டு ராமனிடம் தகராறு செய்துள்ளார், ராமன் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், ஆத்திரம் அடைந்த சந்திரன், காவலாளி ராமனை அடித்து உதைத்து கீழே தள்ளியுள்ளார். பின்னர், கீழே கிடந்த கல்லை எடுத்து ராமனின் தலையில் போட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் இந்த கொலையில் உடனடியாக துப்பு கிடைக்காததால், தீவிர விசாரணைக்கு பின்னர், 2018-ம் ஆண்டு இந்த கொலை வழக்கில் சந்திரன் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், ராமனை சாதிபெயரை சொல்லி திட்டியதும், தெரிய வந்ததால் சந்திரன் மீது கொலை மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை சட்டப்பிரிவும் (எஸ்.சி.-எஸ்.டி.) சேர்க்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இறுதி கட்ட வழக்கு விசாரணை நடைபெற்றது

வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சக்திவேல், குற்றம் சாட்டப்பட்ட சந்திரனுக்கு கொலை குற்றத்துக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1000 அபராதமும், எஸ்.சி.-எஸ்.டி. சட்டப்பிரிவில் மற்றொரு ஆயுள் தண்டனையும் விதித்து இரட்டை ஆயுள் தண்டனையை தீர்ப்பாக வழங்கினார் .

இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட சந்திரன் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...