கோவையில் பஞ்சாப் அரசைக் கண்டிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் விநாயகர் கோவிலில் பிரதமர் பல்லாண்டு வாழ வேண்டும் என சிறப்புப் பூஜையும் மேற்கொண்டனர்.
கோவை: கோவையில் பஞ்சாப் அரசைக் கண்டிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேற்றைய தினம் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தித்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சென்ற போது பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் கட்சியினர் திரண்டதால் பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுத் திரும்பியதாகச் செய்திகள் வெளியாகின. இச்செய்தியானது பாஜக கட்சியினர் இடையேயும் இந்து அமைப்புகள் பலர் இடத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்ட பாஜகவினர் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் காந்திபுரம் சிக்னல் அருகில் உள்ள விநாயகர் கோவில் அருகில் வரிசையாக நின்று பிரதமரின் பாதுகாப்பைப் பஞ்சாப் மாநில அரசு உதாசீனப்படுத்தியதாகக் கூறி அதனைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தியும், "பஞ்சாப்பை ஆள்வது காங்கிரஸ் கட்சியால் இல்லை காலிஸ்தான் தீவிரவாதிகளா" இந்த பதாகைகளை ஏந்தியவாறும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் விநாயகர் கோவிலில் பிரதமர் பல்லாண்டு வாழ வேண்டும் என சிறப்புப் பூஜையும் மேற்கொண்டனர்.
நேற்றைய தினம் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தித்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சென்ற போது பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் கட்சியினர் திரண்டதால் பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுத் திரும்பியதாகச் செய்திகள் வெளியாகின. இச்செய்தியானது பாஜக கட்சியினர் இடையேயும் இந்து அமைப்புகள் பலர் இடத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்ட பாஜகவினர் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் காந்திபுரம் சிக்னல் அருகில் உள்ள விநாயகர் கோவில் அருகில் வரிசையாக நின்று பிரதமரின் பாதுகாப்பைப் பஞ்சாப் மாநில அரசு உதாசீனப்படுத்தியதாகக் கூறி அதனைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தியும், "பஞ்சாப்பை ஆள்வது காங்கிரஸ் கட்சியால் இல்லை காலிஸ்தான் தீவிரவாதிகளா" இந்த பதாகைகளை ஏந்தியவாறும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் விநாயகர் கோவிலில் பிரதமர் பல்லாண்டு வாழ வேண்டும் என சிறப்புப் பூஜையும் மேற்கொண்டனர்.