பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் குடிநீர் தொட்டி அமைத்தால், மாணவர்கள் விளையாடுவது பாதிக்கப்படும் என அப்பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் சுயஸ் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்திற்காக, ராமநாதபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்டு ஜேசிபி எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டும் பணிகள் துவங்கியுள்ளன.
பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் குடிநீர் தொட்டி அமைத்தால், மாணவர்கள் விளையாடுவது பாதிக்கப்படும்என அப்பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் இணைந்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் நிறுவனத்தின் குடிநீர் தொட்டி அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும், மாவட்ட நிர்வாகம் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்களை எழுப்பினர்.