திருப்பூர் மாநகராட்சியில் தூய்மை பணியைத் தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் தூய்மை பணியைத் தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி மற்றும் உடுமலை, பல்லடம் உள்ளிட்ட 6-நகராட்சிகள் 15-பேரூராட்சிகளின் 3- ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தினக்கூலி பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், ஓட்டுநர்கள், சுகாதார பரப்புரையாளர்கள் வேலை செய்து வரக்கூடிய சூழ்நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் இருந்து வெளியிடப்பட்ட தூய்மைப் பணியைத் தனியார் மையப்படுத்தும் உத்தரவு தூய்மைப் பணியாளர்களின் பாதிப்பைக் கடுமையாக்கும் எனவே தூய்மைப் பணியைத் தனியார் மையப்படுத்தும் முடிவைக் கைவிட வேண்டும், ஒப்பந்த தினக்கூலி பணியாளர் ஓட்டுநர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.