ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு தமிழக ஆளுநர் அஞ்சலி

குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மலர் வளையம் வைத்தும், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



நீலகிரி: குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மலர் வளையம் வைத்தும், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் டிசம்பர் 8-ஆம் தேதி கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து வெலிங்டன் ராணுவ மையத்தை நோக்கிச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் மேக மூட்டத்தின் காரணமாக மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட 14-பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்குத் தமிழக முதல்வர் வெலிங்டன் ராணுவ மையத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்ட நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு ராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, விமானப்படை அதிகாரிகள் மற்றும் ராணுவ துறையினர் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் அனைத்து பாகங்களையும் சேகரித்து சூலூர் விமானப்படைத் தளத்துக்குக் கொண்டு சென்றனர்.

இதனையடுத்து கடந்த 18-நாட்களாக ராணுவ கட்டுப்பாட்டிலிருந்து வந்த நஞ்சப்பா சத்திரம் பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறி தடையை விலக்கிக் கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து உதகைக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி குன்னூர் நஞ்சப்பா சத்திரம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் புகைப்படத்திற்கு மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.



அவருடன் அவரது மனைவி, மகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



மேலும் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் வசிக்கும் மக்களிடம் விபத்து குறித்தும் மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...