இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு 20-ஆண்டு சிறை- கோவை நீதிமன்றம் உத்தரவு

பொள்ளாச்சியில், கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு தலா 20-ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 5-ஆயிரம் அபராதம் விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு தலா 20-ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 5-ஆயிரம் அபராதம் விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த 2-வது கணவரைப் பிரிந்த 28-வயதான பெண் வாழ்ந்து வருகின்றார்.



இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு, அந்த பெண்ணை, கணவருடன் சேர்த்து வைப்பதாகக் கூறி, அவரது குடும்ப நண்பர்களான விமல்ராஜ், கார்த்திக் ஆகியோர் ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது, வடுகபாளையம் வழியில் செல்லும் புத்து மாரியம்மன் கோவில் அருகே புதரில் அந்த பெண்ணை தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணையில் அரசு சார்பில் வழக்கறிஞர் ஜிஷா ஆஜராகினார்.

தொடர்ந்து இந்த வழக்கில், பெண்ணை தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட விமல்ராஜ், கார்த்திக் ஆகிய இருவருக்கு தலா 20-ஆண்டு சிறைத் தண்டனையும், தலா 5 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்திரவிட்டார்.

குற்றவாளி கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், கார்த்திக்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...