கோவையில் காவலாளியை கொன்ற தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மது குடிக்க பணம் கேட்டு தராததால் காவலாளியை கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கோவை கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.


கோவை: மது குடிக்க பணம் கேட்டு தராததால் காவலாளியை கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கோவை கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

காவலாளியை கொன்று தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது. கோவை கணபதி அருகே உள்ள நல்லாம் பாளையத்தை சேர்ந்தவர் ராமன்(வயது55). இவர் ஆடீஸ் வீதியில் உள்ள நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான குடோனில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி ராமன் பணியிலிருந்தபோது எட்டிமடையை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சந்திரன் என்கிற சந்திரசேகரன் (43) என்பவர் வந்து மது குடிக்க பணம் கேட்டார்.

ஆனால் ராமன் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்திரசேகரன், காவலாளி ராமனை தாக்கி கீழே தள்ளினார்.

பின்னர் அங்கு கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் தாக்கி முகத்தைச் சிதைத்து கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சந்திரசேகரனை ஒரு வருடத்திற்குப் பின்னர் கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சக்திவேல் காவலாளியை கொடூரமாகக் கொலை செய்த சந்திரசேகரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும், கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...