கோவையில் குழந்தைகளை தாக்கும் டெங்கு காய்ச்சல்: 32-குழந்தைகள் பாதிப்பு

கோவை அரசு மருத்துவமனையில் 32-குழந்தைகள் உள்பட 47-பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 32 குழந்தைகள் உள்பட 47 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் 47-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தி வரும் வேளையில் டெங்கு காய்ச்சலும் சற்று தலை தூக்கி மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் 32- குழந்தைகள் உள்பட 47- பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாகச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. மாநகர் பகுதியில் ஒரு வார்டுக்கு 15-பேர் வீதம் 1500-பேர் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

கொரோனாவுக்கு மத்தியில் இந்த குளிர் காலத்தில் நமக்கு மற்றொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது டெங்கு பாதிப்பு. டெங்கு காய்ச்சல் ஏடீஸ் வகை கொசுக்களினாலேயே பரவுகிறது. பொது இடங்களிலும், வீடுகளிலும் நீர் தேங்கி இருந்தால், அதில் இந்த கொசுக்கள் மிக எளிதாக இனப்பெருக்கம் செய்யும். இதனால் டெங்கு பாதிப்பு வேகமாகப் பரவும். இதனால் பொது இடங்கள் மற்றும் வீடுகளில் கொசுக்கள் எளிதாக உற்பத்தியாக ஏதுவாக மழை நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யத் தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் பெரும்பாலான பகுதிகளில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள்ளேயே இருக்கிறது. இருப்பினும், கோவை மாவட்டத்தில் இந்த மாதம் டெங்கு பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...