அரசின் 100-நாள் வேலைத் திட்ட பணியாளர்களை விவசாயப் பணிகளுக்கு உட்படுத்த தமிழக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: அரசின் 100-நாள் வேலைத் திட்ட பணியாளர்களை விவசாயப் பணிகளுக்கு உட்படுத்த தமிழக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்டம் பந்தயச்சாலை பகுதியில், உள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு. பழனிச்சாமி கூறுகையில்:-
கொங்கு மண்டலம் என்றழைக்கப்படும், கோவை, திருப்பூர் ஈரோடு, ஆகிய பகுதிகளில் மானாவாரி பயிராக மஞ்சள், மஞ்சள் சோளம், மக்காச்சோளம், பயிரிடப்பட்டுள்ளது. அனைத்து பயிர்களும் தற்போது நல்ல விளைச்சல் அடைந்துள்ளது.
அதனைக் கதிர் அறுத்துப் பாதுகாக்க பல்வேறு இடர்பாடுகளுக்கு விவசாயிகள் ஆளாகி வருகின்றனர். காரணம், ஆட்கள் பற்றாக்குறை பெரிய குறையாக உள்ளது. குறிப்பாக மாநகர் பகுதிகளில், பேரூராட்சி பகுதி, நகராட்சி பகுதிகளில், செய்யப் படுகின்ற விவசாயப் பணிகளின் ஒரு பகுதியாக மஞ்சள் சோளம் விதைக்கப்பட்டு, அறுவடைக்குத் தயாராக இருந்தும் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அதனை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அரசு, இந்த 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் பணிக்கு வரும் பணியாளர்களை விவசாயப் பணிகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். தற்போது, அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள், சாலையைச் சுத்தம் செய்வது, குப்பைகளை அப்புறப்படுத்துவது, தேவையற்ற மரக்கிளைகளை வெட்டுவது, கால்வாய்களைத் தூர்வாருவது, பொன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இந்த பணியாளர்களை 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், விவசாயப் பணிகளுக்காக பயன்படுத்தப் பட்டால் மீண்டும் விவசாயம் செழிக்கும், நாடும் வளம் பெறும் என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பந்தயச்சாலை பகுதியில், உள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு. பழனிச்சாமி கூறுகையில்:-
கொங்கு மண்டலம் என்றழைக்கப்படும், கோவை, திருப்பூர் ஈரோடு, ஆகிய பகுதிகளில் மானாவாரி பயிராக மஞ்சள், மஞ்சள் சோளம், மக்காச்சோளம், பயிரிடப்பட்டுள்ளது. அனைத்து பயிர்களும் தற்போது நல்ல விளைச்சல் அடைந்துள்ளது.
அதனைக் கதிர் அறுத்துப் பாதுகாக்க பல்வேறு இடர்பாடுகளுக்கு விவசாயிகள் ஆளாகி வருகின்றனர். காரணம், ஆட்கள் பற்றாக்குறை பெரிய குறையாக உள்ளது. குறிப்பாக மாநகர் பகுதிகளில், பேரூராட்சி பகுதி, நகராட்சி பகுதிகளில், செய்யப் படுகின்ற விவசாயப் பணிகளின் ஒரு பகுதியாக மஞ்சள் சோளம் விதைக்கப்பட்டு, அறுவடைக்குத் தயாராக இருந்தும் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அதனை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அரசு, இந்த 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் பணிக்கு வரும் பணியாளர்களை விவசாயப் பணிகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். தற்போது, அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள், சாலையைச் சுத்தம் செய்வது, குப்பைகளை அப்புறப்படுத்துவது, தேவையற்ற மரக்கிளைகளை வெட்டுவது, கால்வாய்களைத் தூர்வாருவது, பொன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இந்த பணியாளர்களை 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், விவசாயப் பணிகளுக்காக பயன்படுத்தப் பட்டால் மீண்டும் விவசாயம் செழிக்கும், நாடும் வளம் பெறும் என்று தெரிவித்துள்ளார்.