திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பாக தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எஸ்.சுரேஷ் தலைமை வகித்தார்.

இதில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள 12-ஆயிரத்து 624-கிராம ஊராட்சிகளிலும் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் அனைவரும் கிராம ஊராட்சியில் பணியாற்றுபவர்கள்.

எங்கள் பணி இன்றி கிராம ஊராட்சி நிர்வாகத்தைச் செயல்படுத்த இயலாது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம், வீதிகளைச் சுத்தம் செய்து பிளிச்சீங் பவுடர் தூவுதல் மற்றும் கிருமிநாசினி அடித்தல் போன்ற அத்தியாவசிய பணிகள் களத்தில் நின்று உயிர் பயமில்லாமல் மக்களைக் காக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினோம்.

இந்த நிலையில், எங்களின் நிலை கருதி பணியின் தன்மையை அரசு உணர்ந்து முன் கள பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையை வழங்கப்படும் என அறிவித்தது. தற்போது மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறைகளில் பணிபுரியக்கூடியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.



ஆனால் கிராம ஊராட்சிகளில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்ட குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்களுக்கு அரசின் ஊக்கத்தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படவில்லை. அரசின் ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...