திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பாக தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எஸ்.சுரேஷ் தலைமை வகித்தார்.

இதில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள 12-ஆயிரத்து 624-கிராம ஊராட்சிகளிலும் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் அனைவரும் கிராம ஊராட்சியில் பணியாற்றுபவர்கள்.

எங்கள் பணி இன்றி கிராம ஊராட்சி நிர்வாகத்தைச் செயல்படுத்த இயலாது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம், வீதிகளைச் சுத்தம் செய்து பிளிச்சீங் பவுடர் தூவுதல் மற்றும் கிருமிநாசினி அடித்தல் போன்ற அத்தியாவசிய பணிகள் களத்தில் நின்று உயிர் பயமில்லாமல் மக்களைக் காக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினோம்.

இந்த நிலையில், எங்களின் நிலை கருதி பணியின் தன்மையை அரசு உணர்ந்து முன் கள பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையை வழங்கப்படும் என அறிவித்தது. தற்போது மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறைகளில் பணிபுரியக்கூடியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.



ஆனால் கிராம ஊராட்சிகளில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்ட குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்களுக்கு அரசின் ஊக்கத்தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படவில்லை. அரசின் ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...