தமிழ்நாடு கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பாக தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எஸ்.சுரேஷ் தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள 12-ஆயிரத்து 624-கிராம ஊராட்சிகளிலும் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் அனைவரும் கிராம ஊராட்சியில் பணியாற்றுபவர்கள்.
எங்கள் பணி இன்றி கிராம ஊராட்சி நிர்வாகத்தைச் செயல்படுத்த இயலாது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம், வீதிகளைச் சுத்தம் செய்து பிளிச்சீங் பவுடர் தூவுதல் மற்றும் கிருமிநாசினி அடித்தல் போன்ற அத்தியாவசிய பணிகள் களத்தில் நின்று உயிர் பயமில்லாமல் மக்களைக் காக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினோம்.
இந்த நிலையில், எங்களின் நிலை கருதி பணியின் தன்மையை அரசு உணர்ந்து முன் கள பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையை வழங்கப்படும் என அறிவித்தது. தற்போது மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறைகளில் பணிபுரியக்கூடியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

ஆனால் கிராம ஊராட்சிகளில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்ட குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்களுக்கு அரசின் ஊக்கத்தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படவில்லை. அரசின் ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.
தமிழ்நாடு கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எஸ்.சுரேஷ் தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள 12-ஆயிரத்து 624-கிராம ஊராட்சிகளிலும் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் அனைவரும் கிராம ஊராட்சியில் பணியாற்றுபவர்கள்.
எங்கள் பணி இன்றி கிராம ஊராட்சி நிர்வாகத்தைச் செயல்படுத்த இயலாது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம், வீதிகளைச் சுத்தம் செய்து பிளிச்சீங் பவுடர் தூவுதல் மற்றும் கிருமிநாசினி அடித்தல் போன்ற அத்தியாவசிய பணிகள் களத்தில் நின்று உயிர் பயமில்லாமல் மக்களைக் காக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினோம்.
இந்த நிலையில், எங்களின் நிலை கருதி பணியின் தன்மையை அரசு உணர்ந்து முன் கள பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையை வழங்கப்படும் என அறிவித்தது. தற்போது மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறைகளில் பணிபுரியக்கூடியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
ஆனால் கிராம ஊராட்சிகளில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்ட குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்களுக்கு அரசின் ஊக்கத்தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படவில்லை. அரசின் ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.