இந்த விபத்து காரணமாக கோவை - பொள்ளாச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை: கோவை கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் சரக்கு ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மெட்டுவாவி பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி, விவசாயியான இவர் தனது சரக்கு ஆட்டோவில் இன்று மெட்டுவாவி பகுதியிலிருந்து கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, பழைய செக்போஸ்ட் பகுதி சாலையை கடக்கும் போது பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்து சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக ஆட்டோ ஓட்டிவந்த நல்லசாமி காயமின்றி தப்பினார்.

இந்த விபத்து காரணமாக கோவை - பொள்ளாச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மெட்டுவாவி பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி, விவசாயியான இவர் தனது சரக்கு ஆட்டோவில் இன்று மெட்டுவாவி பகுதியிலிருந்து கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, பழைய செக்போஸ்ட் பகுதி சாலையை கடக்கும் போது பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்து சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக ஆட்டோ ஓட்டிவந்த நல்லசாமி காயமின்றி தப்பினார்.
இந்த விபத்து காரணமாக கோவை - பொள்ளாச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.